search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோகர் பாரிக்கர் மறைவு"

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவைத் தொடர்ந்து, பாஜக கூட்டணி கட்சி முதல்வர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. #ManoharParrikar #GoaNextCM
    பனாஜி:

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

    இன்று அதிகாலை கோவா வந்த நிதின் கட்காரி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது வரை புதிய முதல்வர் யார்? என்பதில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

    மைக்கேல் லோபோ

    பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர், முதல் மந்திரியாக விரும்புவதாக பாஜக எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால், ஆலோசனையில் முட்டுக்கட்டை நீடிப்பதாகவும், இன்று மாலை இவ்விவகாரத்தில் முடிவு எட்டும் என்றும் அவர் கூறினார்.

    பாஜக தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல் மந்திரியாக்க விரும்புவதால் ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் முதல்வர் பதவிக்கு விஸ்வஜித்  ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர்.

    இதற்கிடையே, 14 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அக்கட்சியும் முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன. #ManoharParrikar #GoaNextCM

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவால் இன்றிரவு காலமானார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
      
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரிக்கான பணிகளை கவனித்துவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார்.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar  
    ×